Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all 10627 articles
Browse latest View live

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

$
0
0

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5 காசுகள் உயர்ந்ததையடுத்து முட்டை ஒன்று ரூ.4.80-க்கு விற்கப்பட்டு வருகிறது.


டென்ஷன் வேண்டாம்... ரிலாக்ஸ் ப்ளீஸ்...! வருமான வரி தாக்கல் கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

$
0
0

புதுடெல்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த  நிதி ஆண்டுக் கான வருமான வரி கணக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) தாக்கல் செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க, வருமான வரி சட்டத்தில் பிரிவு 234எப் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு ரூ10,000 வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். அதாவது ஏற்கெனவே விதித்திருந்த கெடு தேதியான ஜூலை 31க்குள் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ5,000, ஜனவரி 1ம் தேதிக்கு மேல் தாக்கல் செய்தால் ரூ10,000 அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டு வருவாய் ரூ5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அதிகபட்ச அபராதம் ரூ1,000 மட்டுமே. இதனால், கெடு நெருங்கியதால் வரி செலுத்துவோர் பெரும் பதற்றத்துடன் இருந்தனர். இதற்கிடையில், கெடு தேதியை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் ட்விட்டரில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடுவை ஜூலை 31ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நீட்டிப்பு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து 4வது தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விருப்பம் : பிரதமர் மோடி பேச்சு

$
0
0

ஜோகன்னஸ்பர்க் : ‘‘பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து 4வது தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது’’ என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 10வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. உகாண்டா பயணத்தை முடித்து தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி, அங்கு நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:  நான்காவது தொழிற்புரட்சியை ஏற்படுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் சிறந்த தொழில்நுட்ப முறைகள், கொள்கைகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த சேவையை அளிக்கவும் உதவும். முதல் தொழில்புரட்சி 18ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 4வது தொழில் புரட்சி, நான்கு பெரிய தொழில் சகாப்தமாக இருக்கிறது.  முதலீட்டை விட 4வது தொழில்புரட்சி அதிக முக்கியத்துவம் பெறும். அதிக திறமை, ஆனால் தற்காலிக பணிதான், வேலைவாய்ப்பின் புதிய முகமாக இருக்கும். தொழிற்சாலை உற்பத்தி மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் இருக்கும். எதிர்க்கால தேவைக்கு இளைஞர்களை தயார்படுத்தும் அளவுக்கு பள்ளி,  பல்கலை பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்றார்.

சத்யம் ராஜூ உறவினர்களுக்கு சொந்தமானவை ஒரே அறை... 114 போலி நிறுவனங்கள் : ரெய்டு நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சி

$
0
0

ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரெய்டு நடத்திய கம்பெனி விவகாரத்துறை அதிகாரிகள், அங்கு ஒரே அறையில் 114 போலி நிறுவனங்கள் இயங்கி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சத்யம் ராஜூவுக்கு சொந்தமானவை. கருப்பு பண மீட்புக்காகவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே கம்பெனி பதிவேட்டில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் நீக்கப்பட்டு, அவற்றின் இயக்குநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பார்ச்சூன் மொனார்ச் வணிக வளாகத்தில் கம்பெனி விவகாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது எஸ்ஆர்எஸ்ஆர் அட்வைசரி சர்வீசஸ் என்ற நிதிஆலோசனை  நிறுவனம் இயங்கி வந்த அறையில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். அப்போது ஒரே அறையில் இருந்து 114 போலி நிறுவனங்கள் இயங்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கம்பெனி விவகார அமைச்சக பரிந்துரைப்படி ரெய்டு நடத்தப்பட்டன. பல கம்பெனிகளுக்கு ஒரே முகவரிதான் இருந்தது. சோதனை நடத்தியதில் அனைத்தும் போலி நிறுவனங்கள் எனவும், பெயரளவிற்கு இயங்கியவை என்றும் தெரிய வந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இவ்வளவு போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.  கம்பெனி சட்ட விதிகளின்படி, ஒருவர் 20 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும். இந்த விதிகள் மீறப்பட்டுள்ளதா எனவும் ஆராய்ந்து வருகிறோம். ஏனெனில், ஒரே நபர் பல்வேறு நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்துள்ளார். மேற்கண்ட நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறையும், சிபிஐயும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளன. போலி நிறுவனங்கள் என்ற கோணத்தில் எங்கள் விசாரணை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.  மேற்கண்ட போலி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ 7,000 கோடி மோசடி செய்து தண்டனை பெற்ற சத்யம் ராமலிங்க ராஜூவின் உறவினர்களுக்கு சொந்தமானதாக இருந்துள்ளன. சுமார் 50 நிறுவனங்கள் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஒரே நபர் சுமார் 30 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்து சம்பளமும் பெற்றுள்ளார். இவை சுமார் ரூ8 கோடி முதல் ரூ15 கோடி வரை இழப்பு கணக்கு காட்டியுள்ளன என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முட்டை விலை 480 காசாக உயர்வு

$
0
0

நாமக்கல்:  நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதத்தின் துவக்கத்தில் முட்டை விலை 440 காசாக இருந்தது. கடந்த 25 நாளில் 40 காசு வரை உயர்ந்துள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 434, விஜயவாடா - 437, மும்பை - 483, மைசூர் - 460, பெங்களூரு - 455, கொல்கத்தா - 495, டெல்லி - 428 காசுகள்.

மிளகு கிலோவுக்கு ரூ200 சரிவு

$
0
0

சேலம்:  மிளகு வரத்து அதிகரிப்பால் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ200 விலை சரிந்துள்ளது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘ தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைப்பிரதேசங்களில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதியில் அமோக விளைச்சல் தந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மிளகு விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ மிளகு ரூ 700 என விற்றது. தற்போது கிலோவுக்கு ரூ200 சரிந்து, ரூ500 என விற்பனை செய்யப்படுகிறது,’’ என்றனர்.

ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்வு ; தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

$
0
0

வேலூர் : ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1500 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழக மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. கடந்த ஆண்டு மட்டும் ரூ500 கோடிக்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மருந்துகள் விலை சற்று அதிகரித்திருப்பது உண்மையே. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு மருந்துகள் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2018-19ம் கல்வி ஆண்டில் மதுரை, திருச்செந்தூர், கரூர் ஆகிய இடங்களில் மொத்தம் 170 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் அதாவது 1000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லைக்கு லாரிகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து வந்த பல்லாரி வெங்காயம் அழுகியது : லோடு இறக்கப்படாததால் பல லட்சம் ரூபாய் வீண்

$
0
0

நெல்லை : 7வது நாளாக நீடித்து வரும் லாரி ஸ்டிரைக்கால் நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டிற்கு வந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்லாரி வெங்காய மூட்டைகள் லாரியிலேயே இருந்து அழுகியது. நாடு முழுவதும்  லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், கடந்த 20ம் தேதி தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச் சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று 7வது நாளாக நீடித்தது. நெல்லை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதனால் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு வடமாநிலங்களில் இருந்து பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வரவில்லை. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ70 ஆகவும், கேரட் ரூ60 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட பல்லாரி வெங்காய மூட்டைகள், ஸ்டிரைக் காரணமாக நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இறக்காமல் அப்படியே லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூபாய்  பல லட்சம் மதிப்புள்ள இந்த பல்லாரி மூட்டைகள், தற்போது அழுகிய நிலையில் உள்ளன. லாரி ஸ்டிரைக் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு உள்ளே வந்த கப்பல்களில் சரக்குகளில் ஏற்றி, இறக்க முடியாத நிலை உள்ளது. பல்வேறு கப்பல்கள் சரக்குகளுடன் கடலில் நிற்கிறது. இதனால் ₹பல கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் உப்பு ஏற்றுமதியும் அடியோடு முடங்கியுள்ளது. பல லட்சம் டன் உப்புகள் தேக்கமடைந்துள்ளன.


சொத்து முடக்கத்தை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய லண்டன் கோர்ட் அனுமதி மறுப்பு

$
0
0

லண்டன் : சொத்து முடக்க உத்தரவை ரத்து செய்வதற்காக மல்லையா மேல் முறையீடு செய்வதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. தற்போது லண்டனில் பதுங்கியுள்ள மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவரவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இதில், விஜய் மல்லையாவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களை முடக்கவும், அவற்றை பறிமுதல் செய்து கடன் நிலுவையை வசூலிக்கவும் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.  விஜய் மல்லையா தங்கியுள்ள லேடி வாக் மற்றும் பிராம்பிள் லாட்ஜ் உட்பட அனைத்திலும் சோதனை நடத்தவும், அங்கு உள்ள பொருட்கள் உட்பட அனைத்து சொத்துக்களையும் நிலுவையை வசூலிக்க பறிமுதல் செய்யலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.  அதோடு, மேல் முறையீடு செய்ய அனுமதி மறுத்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து மேல் முறையீடுகளுக்கான நீதிமன்றத்தில், சொத்து முடக்கம் மற்றும் பறிமுதல் உத்தரவை ரத்து செய்வதற்காக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி விஜய் மல்லையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மல்லையா மேல் முறையீடு செய்ய அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது.  இது மல்லையாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ரூ1 கோடி மதிப்பு கொய்மலர்கள் தேக்கம்

$
0
0

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறி உற்பத்திக்கு அடுத்த படியாக கொய்மலர் சாகுபடி உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கொய்மலர்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், அறுவடை செய்யப்பட்ட கொய்மலர்கள் லாரி ஸ்டிரைக் காணமாக வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள கொய்மலர்கள் தேக்கம் அடைந்துள்ளது.

ஜூலை 27 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.18; டீசல் ரூ.71.59

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு

$
0
0

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் உயர்வுடன் 37,336ல் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 111 புள்ளிகள் உயர்வுடன் 11,278ல் புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி பரிசீலனை செயல் திறன் அடிப்படையில் அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை : பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்பு

$
0
0

புதுடெல்லி : அதிகாரிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி பரிசீலனை செய்து வருகிறது. வங்கி  செயல்பாட்டை அதிகரிக்க, பிற பொதுத்துறை வங்கிகளும் இதனை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வராக்கடன் பிரச்னையால் நிதி  சிக்கலில் தவிக்கின்றன. இவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக அளவிலும் கூடுதல் கவனம்  செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், வங்கி நிர்வாகத்தில் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு, செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சுனில் மேத்தா கூறுகையில், ‘‘பொது மேலாளர் நிலை மற்றும்  அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து  வருகிறோம் என்றார். இதே முறையை பின்பற்ற பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா போன்ற பிற பொதுத்துறை வங்கிகளும் திட்டமிட்டு வருவதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியுள்ளது. வராக்கடன் உள்ளிட்ட  பல்வேறு விஷயங்களில் திறம்பட செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏற்கெனவே தனியார் வங்கிகள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு  ஊக்கத்தொகை வழங்கி வருகின்றன. வங்கி கிளை அளவிலும் சிறப்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இது கூடுதல் தொகையாகவோ  அல்லது வங்கி பங்குகளாகவோ வழங்கப்படுகிறது.  பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை இந்திய வங்கிகள் சங்கம், வங்கி யூனியன் மற்றும் வங்கி நிர்வாகம்  இடையே பேச்சு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், வங்கி யூனியன்கள் தரப்பில் செயல் திறன் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை  வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு பதவி, ஒரு ஊதியம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

தொடர் விலைவீழ்ச்சி காரணமாக வெற்றிலை பறிக்க விவசாயிகள் தயக்கம் : பல நூறு ஏக்கர் பயிர் வீணாகும் அவலம்

$
0
0

ஆம்பூர் : தொடர் விலை வீழ்ச்சி காரணமாக வெற்றிலை பறிக்க விவசாயிகள் தயங்குவதன் காரணமாக பல நூறு ஏக்கர் வெற்றிலை வீணாகும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், சாந்திநகர், ஜமீன், கீழ்முருங்கை, ரெட்டி மாங்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், மாதனூர், தோட்டாளம், அகரம்  சேரி, பனங்காட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. பீடாவிற்காக கொல்கத்தா வெற்றிலை, விசேஷங்களுக்காக கருப்பு மற்றும்  வெள்ளை வெற்றிலை பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த கோடை காலத்தில் வெற்றிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கவுளி  வெற்றிலை ரூ20ல் இருந்து ரூ50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதிக விளைச்சல் இருந்தாலும் வெற்றிலை விலையில் வீழ்ச்சி  காணப்படுவதாக கூறி வெற்றிலையை வாங்கி செல்லும் புரோக்கர்கள் விலையை கவுளிக்கு ரூ6 ஆக வழங்க கோருகின்றனர். ரூ6 க்கு நூறு வெற்றிலை  கொண்ட ஒரு கவுளி கொடுத்தால் பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைக்காது என்பதால் வெற்றிலை விவசாயிகள் பறிக்காமல் கொடியில் விட்டுள்ளனர்.மேலும், ஆந்திர மாநிலம் குப்பம், மதனபல்லி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட ரக வெற்றிலை விலை குறைவாக மார்க்கெட்டிற்கு  வந்திருப்பதால் தமிழக வெற்றிலைக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெற்றிலை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘வெற்றிலைக்கு வருடம்  முழுவதும் மார்க்கெட்டில் அதிக விலை உள்ளது. குறிப்பாக பண்டிகை காலமான ஆடி மாதம் துவங்கி தை மாதம் வரை வெற்றிலை ஒவ்வொரு  விசேஷங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கடைகளில் ஒரு வெற்றிலை ரூ1 வரை விற்கப்பட்டாலும் அந்த விலை விவசாயிகளை  வந்தடைவதில்லை’ என்றார். எனவே, இடைத்தரகர்கள், கொண்டு செல்லும் விலை ஆகியவை காரணமாக உரிய விலை கிடைக்காமல் இருப்பதை தவிர்க்க அரசு  உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மேற்கு கடற்கரையில் ஜூலை 31ல் மீன்பிடி தடைக்காலம் நீங்குகிறது : ஐஸ்கட்டி, டீசல் கொள்முதல் பணிகள் தீவிரம்

$
0
0

குளச்சல் : குமரி மேற்கு கடற்கரையில் ஜூலை 31 முதல் மீன்பிடி தடைக்காலம் விலக்கிக் கொள்ளப்படுவதால் விசைப்படகுகளுக்கான ஐஸ்கட்டி,  டீசல், குடிநீர் கொள்முதல் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  குமரி மாவட்டத்தில் குளச்சல்  கடற்பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர்  வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழில் செய்து  வருகின்றன. விசைப்படகுகள்  ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை  திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான்  உயர் ரக மீன்களாகிய கணவாய்,  இறால், புல்லன், கேரை, சுறா போன்ற மீன்கள் கிடைக்கிறது.  ஆண்டுதோறும்  மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மத்திய அரசு  60 நாட்கள் தடை விதித்து உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு  கடற்கரையை உள்ளடக்கிய குமரி மாவட்டத்தில் இந்த தடை காலம் 2  பருவ காலமாக உள்ளது.  கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஏப்ரல்  15 முதல் ஜூன் 15ம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன் 1 முதல்  ஜூலை 31 வரையும் தடை  விதிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரையில் இந்த தடை  காலம் கடந்த ஜூன் 14ம் தேதி நள்ளிரவு முதல்  நீங்கி அங்கு விசைப்படகினர்  தொழில் செய்து  வருகின்றனர். மேற்கு கடற்கரை பகுதியில்  ஜூன் 1ம் தேதி காலை  முதல் தடை காலம் தொடங்கி அமலில் இருந்து வருகிறது.  இது வரும் 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. கோவளம், மணக்குடி,  ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், உள்ளிட்ட கடலோர கிராமங்கள் மேற்கு  கடற்கரை  பகுதியில் உள்ளதால் இந்த பகுதியில் வரும் 31ம் தேதி நள்ளிரவு முதல்   தடைக்காலம் நீங்குகிறது.  இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல்  மீண்டும் மீன்பிடிக்க செல்ல மேற்கு கடற்கரை  விசைப்படகினர் தயாராகி  வருகின்றனர். படகு மற்றும் மீன்பிடி  உபகரணங்கள், வலைகள் ஆகியவற்றை  பழுது  பார்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். தவிர ஆழ்கடலில் தங்கி மீன்  பிடிக்கும் விசைப்படகுகளுக்கு ஐஸ் கட்டிகள், டீசல், குடிநீர், சமையல்  பொருட்கள் ஆகியவை தேவைப்படும் என்பதால்  இவற்றையும் விசைப்படகினர் கொள்முதல்  செய்ய துவங்கி உள்ளனர். இதனால் கடந்த 2 மாதங்களாக சோர்வாக இருந்து வந்த  மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள்  உற்சாகமடைந்துள்ளனர்.


வருவாயை அதிகரிக்க ரயில்வே திட்டம் ஓட்டல்களாகும் பழைய ரயில் பெட்டிகள்

$
0
0

புதுடெல்லி, ஜூலை 28: பழைய ரயில் பெட்டிகளை தீம் ரெஸ்டாரன்ட்களாக மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை தவிர, பிற வழிகளிலும் வருவாயை அதிகரிக்க ரயில்வே முயற்சித்து வருகிறது.  இந்த வகையில், பழைய ரயில் பெட்டிகளை ஓட்டல்களாக மாற்றும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. இது தொடர்பாக மண்டலங்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.  இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:  ரயில் பெட்டிகள் பல பழுது நீக்க முடியாத வகையில் உள்ளன. தேவைக்கேற்ப புதிதாக நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பழைய  பெட்டிகளை பயன்படுத்தி ரயில்வே தீம் ரெஸ்டாரன்ட்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, ரயில்  மியூசியம், பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. இதுபோல், ரயில் ரெஸ்டாரன்ட்களும் பொதுமக்களை கவரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டிலேயே முதல் முறையாக போபாலில் ஷான்-இ-போபால் ரயில் தீம் ரெஸ்டாரன்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் ரெஸ்டாரன்ட் மட்டுமின்றி, சலூன், மியூசியம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் இதுதொடர்பான பணி விவரங்கள்  குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

தொடர் மழை காரணமாக தென்னை நார் உற்பத்தி துவங்குவதில் தாமதம் : ரூ200 கோடி ஏற்றுமதி பாதிப்பு

$
0
0

கோவை, ஜூலை 28: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டத்தால் இந்த மாதத்தில் துவங்க வேண்டிய தென்னை நார் உற்பத்தி மற்றும்  ஏற்றுமதி சீசன் துவங்கவில்லை. இதனால் கடந்த 3 வாரத்தில் கோவை உட்பட தமிழகத்தில் ரூ200 கோடி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் சார்பு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் 400 உட்பட தமிழகத்தில் 1,700 உள்ளன. இவை  தென்னை மட்டையை மூலப்பொருளாக கொண்டு தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள் தயாரித்து வருகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு  நாளைக்கு 4 டன் தென்னை நார் மற்றும் 5 டன் தென்னை நார் தூள் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள்களில்  80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.  இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தென்னை மட்டையின் வரத்து குறைவு காரணமாக 25 சதவீத உற்பத்தியும், ஏற்றுமதியும் குறைந்தது. இந்நிலையில், கடந்த  ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் தென்னை நார் பொருட்களை உலர்த்த முடியாமல் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கோயம்புத்தூர் தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது:  கோவை மாவட்டத்தில் தினசரி ரூ5 கோடி மதிப்பிலான தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் உற்பத்தியாகிறது. தென்னை நார் தொடர்ந்து ஒரு நாள்  வெயிலில் காய வேண்டும், அதே போல் தென்னை நார் துகள் தொடர்ந்து 5 நாள் வெயிலில் காய வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக நிலவும்  மழை மற்றும் மேகமூட்டத்தால் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாளில் கோவை மாவட்டத்தில் ரூ100 கோடி உட்பட  தமிழகத்தில் ரூ200 கோடி உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் ஏற்றுமதி சீசன் ஜூலை முதல் டிசம்பர்  மாதமாகும். சீசன் துவக்கத்திலேயே உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் மற்றும் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

புவிசார் குறியீடு கிடைத்தும் பலனில்லை விலையில் மணக்காத மதுரை மல்லி : விவசாயிகள் ஏமாற்றம்

$
0
0

மதுரை, ஜூலை 28: புவிசார் குறியீடு கிடைத்தும் மதுரை மல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு சென்ட்  ஆலை, குளிரூட்டும் குடோன் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.  பூக்களில் மல்லிகையின் நறுமணம் தனி சிறப்புடையது. அதிலும் மதுரை மல்லிகைக்கு மவுசு அதிகம். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம்,  உசிலம்பட்டி தாலுகா பகுதிகளில் சுமார் 1,250 ஹெக்டேர் பரப்பில் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. மதுரை விவசாயிகள் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மல்லிகை பூச்செடிக்கு பதியம் பெற்று, நவம்பரில் நடவு செய்வார்கள். மார்ச் முதல் அக்டோபர் வரை  மகசூல் செய்வார்கள். ஏப்ரல், ஜூன், ஜூலையில் பூத்துக்குலுங்கும் என்பதால் விலை பயங்கரமாக வீழ்ச்சியாகும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. பனி சீசனில்  பூக்கள் உதிர்வதால் உற்பத்தி குறையும். ஆனால் விலை ஏற்றம் இருக்கும். இந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மல்லிகை பூவுக்கு புவிசார் குறியீடு  கிடைத்தது. இதன் மூலம் மதுரை மல்லிகை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே  மிஞ்சியது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “மதுரையில் மல்லிகை பூ சென்ட் ஆலை அமைக்கும் திட்டம், விலை வீழ்ச்சி அடைந்தால் வாடாமல் சேமித்து வைத்து,  விலை ஏறும்போது விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட குடோன்கள் அமைக்கும் திட்டம் என அரசின் அறிவிப்புகள் காற்றில் பறந்து விட்டன. மல்லிகையில்  நறுமண சோப்பு, ஆயில், ஷாம்பு தயாரிப்பு திட்டங்கள் நிறைவேறினால் மல்லிகை விவசாயிகள் வாழ்வில் மணம் வீசும்’’ என்றனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘மல்லிகைப்பூவை பொறுத்தவரை டல் சீசனில் கிலோ அதிகபட்சமாக ரூ4 ஆயிரம் வரை சென்றுள்ளது. தற்போது வரத்து  அதிகரித்தும், ஆடி மாதம் விசேஷங்கள் இல்லாததால் கிலோ ரூ500 - 600 வரை விற்கிறது. நிலையில்லாத விலையால் எங்களுக்கும் பெரிய லாபமில்லை’’  என்றனர்.'மனசு வைக்குமா அரசு?மல்லிகை பூ சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் செலவாகிறது. பூ பறிக்க கிலோவுக்கு ரூ40 முதல் 50 வரை கூலியாகிறது. ஜிஎஸ்டி,  பூக்களை தோட்டங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர போக்குவரத்து கட்டணம். இப்படி பல்வேறு வகையில் உச்சத்திற்கு சென்று விடுகிறது. ஆனால்  திருமண சீசன், கோயில் திருவிழா காலங்களில் மட்டும் கிலோ ரூ1,000 முதல் 3000 வரை விற்பனையாகிறது. சாதாரண நாட்களில் அடிமாட்டு விலைக்கு  செல்கிறது. இது வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையாகும். விவசாயிகளுக்கு இந்த விலை கூட கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர். எனவே விவசாயிகளுக்கு  விலை கிடைக்க நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயிப்பது போல் மல்லிகை பூவிற்கும் நிர்ணயித்து, கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாவல்பழ சீசன் தொடக்கம் கிலோ ரூ240க்கு விற்பனை

$
0
0

அலங்காநல்லூர் :  அலங்காநல்லூர் பகுதியில் நாவல் பழ சீசன் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.240 வரை விற்பனையாகிறது.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சுற்றியுள்ள சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி, வலையப்பட்டி, கோடாங்கிபட்டி, சாத்தியார்  அணை, புதுப்பட்டி, சர்க்கரை ஆலை, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நாவல்பழ மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது நாவல்பழ சீசன்  தொடங்கியுள்ளது. இங்கு பறிக்கப்படும் பழங்கள், வியாபாரிகளால் வாங்கி செல்லப்பட்டு, மதுைர மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் விற்பனை  செய்யப்படுகிறது. தற்போது ஒரு படி ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.240க்கும் விலை போகிறது. ஆகஸ்ட் கடைசி வரை நாவல் பழ சீசன் நீடிக்கும் என விவசாயிகள்  தெரிவித்தனர்.

ஜூலை 28 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79. 22; டீசல் ரூ.71.63

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.63-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Viewing all 10627 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>